படம்: சத்தம் போடாதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: நேஹா பாஸின்
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதேன்
மனம் அல்லவா
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரமே இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஒ ஒ ஒஹோ முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாதே
வலியில்லாமல் மனம் கிடையாதே
வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன்
மனம் அல்லவா
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்குதே தானே வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன்
மனம் அல்லவா
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காது நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே .