படம்: பாவ மன்னிப்பு
இசை: M S V
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான்மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அதுவேதான் விதி என்று ஓதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படையினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம் தனை படைத்தான்
எதனை கண்டான் பணம் தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ம் ம் ம் ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான்மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஒ ஹோ ஒ ஹோ ஒ ஹோ .