10.04.2012

தென்றல் வந்து தீண்டும் போது

படம்: அவதாரம் 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா ஜானகி 

தென்றல் வந்து தீண்டும் போது  என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல 
வந்தூ வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கு   ஏத்தபடி  வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்  
பொன்னம்மா சின்ன கண்ணே 
தென்றல் வந்து தீண்டும் போது  என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல 

எவரும்  சொல்லாமலே பூக்களும்  வாசம் வீசுது 
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது 
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது 
ஓடை நீரோடை இந்த உலகம்  அதுபோல 
ஓடம் அது ஓடும் இந்த காலம் அதுபோல 
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே 
தென்றல் வந்து தீண்டும் போது  என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல 

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது 
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது 
ஆழம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது 
அலையும் அல போல அழகெல்லாம் கோலம் போடுது 
குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா 
கிளியே கிளியினமே அதை கதையா பேசுதம்மா 
கதையா விடுகதையா ஆவதில்லையே அன்புதான்....

தென்றல் வந்து தீண்டும் போது  என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல 
வந்தூ வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா 
எண்ணங்களுக்கு   ஏத்தபடி  வண்ணமெல்லாம் மாறுமம்மா 
உண்மையிலே உள்ளது என்னென்ன வண்ணங்கள் என்னென்ன
தென்றல் வந்து தீண்டும் போது  என்ன வண்ணமோ மனசுல 
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல