10.01.2012

மடை திறந்து தாவும் நதி அலை நான்

படம்: நிழல்கள் 

இசை: இளையராஜா

பாடியவர்: SPB

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் 
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது 
ஹோ ....தானான தானான ....

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பாதலே நானும் இறைவனே !!! ஹே
புது ராகம் படைப்பாதலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைப்பேன் நான்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது
ஹோ ...

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்களம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்!!!!!

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது
ஹோ ..