10.14.2012

அந்தி மழை பொழிகிறது

படம்: ராஜபார்வை 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB ஜானகி  

அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
இந்திரன் தொட்டது முந்திரியே 
மன்மத நாட்டுக்கு மந்திரியே 
அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது 
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் 
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய் 
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே 
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமயிலே
அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 

தேகம் யாவும் தீயின் தாகம் 
தாகம் தீர நீ தான் மேகம் 
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது 
நெஞ்சுகொரு கொஞ்சமிது தாவணி விசிறிகள் வீசுகிறேன் 
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனை பூசுகிறேன் 
அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
ஆஆஆஅ 
சிற்பியில் தப்பிய நித்திரையே 
ரகசிய ராத்திரி புத்தகமே 
அந்தி  மழை பொழிகிறது 
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது .