10.14.2012

சக்கரை நிலவே பெண் நிலவே

படம்: யூத்
இசை: மணி ஷர்மா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா 

சக்கரை நிலவே பெண் நிலவே 
காணும்போதே கரைந்தாயே 
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே 
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும்போதே கரைந்தாயே 
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே 
மனம்  பச்சை தண்ணிதான் பெண்ணே 
அதை பற்ற வைத்தது உன் கண்ணே 
என் வாழ்க்கை  என்னும் காட்டை எரித்து 
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே 
கவிதை பாடின கண்கள் 
காதல் பேசின கைகள் 
கடைசியில் எல்லாம் பொய்கள் 
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா 
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும்போதே கரைந்தாயே 
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே 

காதல் என்ற ஓன்று அது கடவுள் போல 
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை 
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல 
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை  எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் 
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே 
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் 
சதையல்ல கல்லின் சுவரா?
கவிதை பாடின கண்கள் 
காதல் பேசின கைகள் 
கடைசியில் எல்லாம் பொய்கள் 
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா 

நவம்பர் மாத மழையில் நான்  நனைவேன் என்றேன் 
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் 
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் 
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் 
சுகமான குரல் யார் என்றால் சுஷீலவின் குரல் என்றேன் 
எனக்கும் அந்த குரலில் ஏதோ ஒரு மயக்கம் என் நீ சொன்னாய் 
கண்கள் மூடிய புத்தர் சிலை 
என் கனவில் வருவது பிடிக்கும்   என்றேன் 
தயக்கம் என்பது சிறிதும் இன்றி 
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும்  என்றாய் 
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க 
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?