படம்: தம்பிக்கு எந்த ஊரு
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன....காதல் வாழ்க
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆ ஆ ஆ ஆ அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை ஆ ஆ ஆ ஆ
பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே
கண்ணுல காந்தம் வைத்த கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன....காதல் வாழ்க
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில் .