படம்: தசாவதாரம்
இசை:ஹிமேஷ்
பாடியவர்கள்: ஹரிஹரன்
ஓஓஓஓஓஓஓஓஓஓம் நமோ நாராயணா
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து ஏன் கழியும் என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்சரக்ஷ்ரம் பார்க்காது
ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்
(மண்ணுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சக பொய் அகல
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிராத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாந்த தின் தோலே மணிவண்ணா நின் சேவடி சேவி திருகாப்பு)
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
வீரசைவர்கள் முன்னாள் எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீநிவாசன் சேர்ந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்க ஜோதி சாகாது
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்துடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைந்துடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது .