படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவ குயில்கள்
உன்னாலே ஹே மிதக்கின்ற பாலாடை
உன்காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ( மொழிகளில் )
ஒளிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிபூக்கள் ஹே உனை கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும்
அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வை துளியது போகும் வரையினில்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்
நீதானே என் பொன் வசந்தம்
புது ராஜவாழ்க்கை நாளை உன் சொந்தம்