படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை எங்க
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதில்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை
இது நாடா இல்லை வெறும் காடா இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்லை வெறும் காடா இதை
கேட்க யாரும் இல்லை தோழா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை எங்க
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடுயின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை எங்க
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை
ஆற்றுக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை எங்க
பாரதத்தின் சோத்து சண்டை தீரவில்லை
இது நாடா இல்லை வெறும் காடா இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்லை வெறும் காடா இதை
கேட்க யாரும் இல்லை தோழா