படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்,ஸ்ரேயா கோஷல்
பாடல் ஆசிரியர்: விவேகா
பாடல் ஆசிரியர்: விவேகா
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை தானே என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா!!!
நாணி கோணி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்கிறாய்
மருதாணி பூத்த காணி என்னை தானே என்று கேட்கிறாய்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா!!!
ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நான் போகும் சாலைகள் முடியாமல்
எங்கெங்கோ நீளும்
நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம்
உன்னெதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன் மெதுவாக மெதுவாக
உனதாகிறேன் உயிரே உயிரே
உயிர் போதும் போல துணை
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை தானே என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்
தொலைதூரம் போனதே என் மேகம்
புரியாத மென்சோகம் முகிர்மேலே ஊசி இறக்கம்
ஒ.....பிரிவாலே இன்று நான் போராட
விழி ஓரம் நீரோட
அவள் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகை வெளி காட்டும் சாரலில்
என்னை போல சாயலில் ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி
நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை தானே என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால்வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கறேன்
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்
எனை எங்கே என்று தேடினேன்
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா!!!