7.13.2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி

படம்:  தங்க மீன்கள் 
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி 
இசை: யுவன் ஷங்கர் ராஜா 

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் 
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவை இல்லை 
சிறு புல்லில் உறங்கும் பனியில்  தெரியும் 
மலையின் அழகோ தாங்கவில்லை 
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி 
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி 
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 

தூரத்து மரங்கள் பார்க்குதடி 
தேவதை இவளா கேட்க்குதடி 
தன்னிலை மறந்து பூக்குதடி 
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு 
உனது புன்னகை போதுமடி 

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் 

உன்முகம் பார்த்தால் தோணுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பாக்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி 
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு  நல்லபடி 

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே 
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி 

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி 
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் .