6.25.2013

ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே


படம்: அழகன் 
இசை: மரகதமணி 
பாடியவர்: SPB 


ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே 
ஆசையின்னா ஆசையடி  அவ்வளவு ஆசையடி 
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ 
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் 
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு 
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே 
ஆசையின்னா ஆசையடி  அவ்வளவு ஆசையடி 

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா 
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழு  நீ ஒரு கைதியா 
தேசம்  வேறல்ல தாயும்  வேறல்ல ஒன்று தான் 
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான் 
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது 
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும் 
உன்னைப்போல் எல்லோரும் என 
எந்நாளும் அதில் இன்பத்தை தேடனோம் 
ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே 
ஆசையின்னா ஆசையடி  அவ்வளவு ஆசையடி 

உலகம் யாவும் உண்ணும்போது 
நாமும் சாப்பிட எண்ணுவோம் 
உலகம் எல்லாம்  சிரிக்கும்போது 
நாமும் புன்னகை சிந்துவோம் 
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி 
பாடும் நம்தமிழ் பாட்டன்  சொன்னது கண்மணி 
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி 
பாடும் நம்தமிழ் பாட்டன்  சொன்னது கண்மணி 
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா 
படிச்சத  நெனச்சு நாம் நடக்க தான் 
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு 

ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே 
ஆசையின்னா ஆசையடி  அவ்வளவு ஆசையடி 
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ 
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் 
கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று 
பின்பு கட்டிலில் தாலாட்டு .