இசை: T.ராஜேந்திர்
பாடியவர்கள்: SPB ஜானகி
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோபொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோபொழுதும் போகாதோ
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
துயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன் மோகமும் தீராதா
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றாள் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா மடியை
தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
எனையே ஈர்த்திடவா
மாலை நம்மை வாட்டுது
மணநாளை இமை தேடுது
மாலை நம்மை வாட்டுது
மணநாளை இமை தேடுது
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ.