12.05.2012

காற்றில் வரும் கீதமே

படம்: ஒரு நாள் ஒரு கனவு 
இசை: இளையராஜா 
பாடியவர்: பவதாரிணி 

காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா 
அவன் வாய் குழலில் அழகாக 
அமுதம் ததும்பும் இசையாக 
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து 
காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா 

பசு அறியும் அந்த சிசு அறியும் 
பாலை மறந்து அந்த பாம்பு அறியும் 
பசு அறியும் அந்த சிசு அறியும் 
பாலை மறந்து அந்த பாம்பு அறியும் 
வருந்தும் உயிருக்கு 
ஆ ஆ ஆ 
வருந்தும் உயிருக்கு 
ஒரு மருந்தாகும் 
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் 
இசையின் பயனே இறைவன் தானே 
காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா 
காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா 

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன் 
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் 
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் 
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம் 
திறந்த கதவு என்றும் மூடாது 
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது 
இது போல் இல்லம் எது சொல் தோழி 

காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா 
அவன் வாய் குழலில் அழகாக 
அமுதம் ததும்பும் இசையாக 
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து 
காற்றில் வரும் கீதமே 
என் கண்ணனை அறிவாயா.