12.05.2012

என் வீட்டு ஜன்னல்

படம்: ராமன் அப்துல்லா 
இசை: இளையராஜா 
பாடியவர்கள் : பவதாரிணி,அருண்மொழி 

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்சை தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு 
கையோசு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரைச்சி வைச்சேன் 
மஞ்ச தண்ணி கரைச்சி வைச்சேன் ராசா ராசா 
உருகாம உருகி நின்னேன் 
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா 

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்சை தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கையாலே  பேசு 
கையோசு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரைச்சி வைச்ச 
மஞ்ச தண்ணி கரைச்சி வைச்ச  ராணி ராணி 
உருகாம உருகி நின்னேன் 
உன் அழகை பருகி வந்தேன் ராணி ராணி 

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு 
முந்தானை தந்தானம் பாட 
கேட்டு அதை கேட்டு கிறங்காமல் சுருதி மீட்டு 
நெஞ்சோரம் சிங்காரம் தேட 
வயிலோரம் வரப்போறம் தினம் காத்திருந்து வாட 
இரு தோளில்  ஒரு மாலை 
இது ராத்திரியில் சூட 
நான் உறவாய்  வரவா வரவா 

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்சை தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கையாலே  பேசு 
கையோசு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரைச்சி வைச்சேன் 
மஞ்ச தண்ணி கரைச்சி வைச்சேன் ராசா ராசா 
உருகாம உருகி நின்னேன் 
உன் அழகை பருகி வந்தேன் ராணி ராணி 

பாடு நடை போடு அழகோடு உறவாடு 
ஆகாயம் கிட்டே வராது 
மூடு திரை போடு முத்தாடி விளையாடு 
முச்சூடும் என்னை விடாது 
மறவேனே வருவேனே 
சிறு பூ பறித்திட தானே 
வரம் நானே பெறுவேனே 
நீ மன்மத மலை தேனே 
நான் உறவாய்  வரவா வரவா 

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்சை தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு 
கையோசு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரைச்சி வைச்ச 
மஞ்ச தண்ணி கரைச்சி வைச்ச  ராணி ராணி 
உருகாம உருகி நின்னேன் 
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்சை தொட்டு தொட்டு நீ தாக்குற .