படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி
தானம் தம்த தானம் தம்த
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வேறென்ன செய்தி தேவனே
நானுந்தான் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஒ ஒ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஒ ஒ பூவும் ஆளானதே
அமுத கானம் நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகி போனால் எனது சலங்கை
விதவை ஆகி போகுமே
கண்களில் மௌனமோ கோயில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி விழவா
விழியாகி விடவா
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஒ ஒ பூவும் ஆளானதே
இசையை அருந்தும் சாதக பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ நியாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே
வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஒ ஒ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே.