11.08.2012

நறுமுகையே நறுமுகையே நீ

படம்:  இருவர் 
இசை: A.R .ரஹ்மான் 
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் ,பாம்பே ஜெயஸ்ரீ 

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் 
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய் 
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய 
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய 
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா 

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய் 
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய் 
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் 
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் 
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா 

மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்தது என்ன 
மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்தது என்ன 
பாண்டி நாடனை கண்ட என் உடல்  பசலை கொண்டதென்ன 
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் 
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் 
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை 
இடையில் மேகலை இருக்கவில்லை 
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் 
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய் 
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் 
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய 
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா 

யாயும் யாயும் யாரோகியரோ என்று நேர்ந்ததென்ன 
யாயும் யாயும் யாரோகியரோ என்று நேர்ந்ததென்ன 
யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல் 
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன 
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய் 
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய் 
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் 
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில் 
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றி தரள நீர் வடிய 
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா .