படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்கள் : ஜேசுதாஸ் ,சுஜாதா
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்லவந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சுட பூ வேணுமா
பூவிங்கு நீதானம்மா
அடி கல்யாண ஊர்கோலமா
இனி எப்போதும் கார்காலமா
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஏனோ மனது உன்னை கண்ட பொழுது
காற்றில் ஒரு மேகம் என ஆச்சி
ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு
கண்ணாமூச்சி ஆடும் கதை ஆச்சி
உன்னை அழைத்தவன் நானே நானே
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்
கூண்டுக்கிளி இங்கு நானே நானே
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்
உன் சேலை நூலாக வா நான்
உன் கூந்தல் பூவாக வா
அடி நான் இன்று நீயாக வா
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பூவான என் நெஞ்சம் போராட
தூங்காத கண்ணோடு நீராட
உறவான நிலவொன்று சதிராட
கடிதங்கள் வாராமல் உயிர்வாட
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்
பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா
காதல் மனசு தத்தளிக்கும் வயசு
எப்பொழுதும் ஜன்னல் எட்டி பார்க்கும்
ராத்திரி பொழுதும் பௌர்ணமி நிலவும்
என் மனதை சுட்டுவிட்டு போகும்
தனிமைகள் என்னை தொடுமே தொடுமே
பனித்துளி என்னை சுடுமே சுடுமே
தாகம் கொண்ட தங்க குடமே குடமே
அள்ளித்தர கங்கை வருமே வருமே
மேகங்கள் தேனுற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே
ஒரு பூமாலை தோள் சேருமே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்லவந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சுட பூ வேணுமா
பூவிங்கு நீதானம்மா
அடி கல்யாண ஊர்கோலமா
இனி எப்போதும் கார்காலமா
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே