11.02.2012

உன்னை கண்டேனே முதல் முறை

படம்: பாரிஜாதம் 
இசை: தரன்
பாடியவர்கள்: ஹரிசரண்,சுருதி

உன்னை கண்டேனே முதல் முறை 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 
உன்னை கண்டேனே முதல் முறை 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய் 
ஹையோ ஹையோ யோ  அச்சம் வருதே 
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே 
ஹையோ ஹையோயோ சீ என்னோவோ பண்ணினாய் நீயே 
உன்னை கண்டேனே முதல் முறை 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது 
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது 
இனிக்கிற வலி இது இன்னுமுள்ள பூ இது 
இதயத்தில் மலர்வது ஒ பெண்ணே 
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது 
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்வு இது 
அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது 
அகிம்சை  சொல்வது கேள் பெண்ணே 

ஏங்கினேன் நான் தேங்கினேன் 
ஏனடா போதும் இம்சைகள் 
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே 
உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே 

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும் 
கண்ணோடு இருக்கும் பல கடிதம் 
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன் 
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ 
ஒ காதல் எனை தாக்கிடுதே 
சரிதான் எனையும் அது சாய்த்துடுதே
இரவில் கனவும் எனை சாப்பிடுதே 
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே  
உன்னை கண்டேனே முதல் முறை 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால் 
உடனே என் உள்ளே நீ வருவாய் 
கோயில் உள்ளே கண் மூடி நின்றாய் 
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில்  தோன்றுமே 
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன் 
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன் 
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் 
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும்  காதல் 
உன்னை கண்டேனே முதல் முறை நான் 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 
உன்னை கண்டேனே முதல் முறை 
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் 
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய் 
ஹையோ ஹையோ யோ  அச்சம் வருதே 
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே 
ஹையோ ஹையோயோ சீ என்னோவோ பண்ணினாய் நீயே 
மனசுக்குள் ஏதோ சொல் சொல் 
எதிரினில் வந்து நில் நில் 
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல் 
இது சரிதானா நீ சொல் 
மனசுக்குள் ஏதோ சொல் சொல் 
எதிரினில் வந்து நில் நில் 
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல் 
இது சரிதானா நீ சொல்