படம்: குங்குமச்சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சி ஆனதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜன்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது.