படம்: அவர் எனக்கே சொந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணியிது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்
விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன்மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணியிது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்
கண்ணே மணியே பொன்னெழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடிவா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறையவே
தேவன் திருச்சபை மலரிது
வேதம் ஒலிக்கின்ற மணியிது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராகம்.