10.07.2012

மன்றம் வந்த தென்றலுக்கு

படம்: மௌனராகம் 
இசை: இளையராஜா
பாடியவர்: SPB

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ 
கண்ணே என் கண்ணே 
பூபாளமே கூடாதென்னும்  வானம் உண்டோ சொல் 
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 

தாமரை மேலே நீர் துளி போல் 
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன 
நண்பர்கள் போலே வாழ்வதற்கு 
மாலையும் மேளமும் தேவை என்ன 
சொந்தங்களே இல்லாமல் 
பந்த பாசம் கொள்ளாமல் 
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்....
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே ...

மேடையை போலே  வாழ்க்கை அல்ல 
நாடகம் ஆனதும் விலகி  செல்ல 
ஓடையை போலே  உறவும் அல்ல 
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும் 
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா 
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே 
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ 
கண்ணே என் கண்ணே 
பூபாளமே கூடாதென்னும்  வானம் உண்டோ சொல் 
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ 
அன்பே என் அன்பே