10.07.2012

வா பொன்மயிலே நெஞ்சம்

படம்: பூந்தளிர் 
இசை: இளையராஜா
பாடியவர்: SPB

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 
என்றும் நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

காதலின் ஜாடை எல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே 
கனியே மனம் மயங்க மயங்க 
வருவாய் சுவை பெருக பெருக 
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர 
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 
என்றும் நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 

மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ 
பூமியின் நீள நிறம் கண்ணளந்ததோ 
அழகே சுகம் வளர வளர 
நினைவே தினம் பழக பழக 
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே  கலந்து மகிழ 
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது 
என்றும் நீயின்றி நானில்லை 
நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது