10.23.2012

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா 
அடடா 
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 

கன்னத்தின் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே 
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே 
கன்னியின் கழுத்தை பார்த்தால் மணமாகவில்லையே 
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே 
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு 
ஆதரவாய் சாய்ந்துவிட்டாள் ஆரிரோ பாடு 
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ 
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா 
அடடா 
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ 
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ 
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ 
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ 
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம் 
ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் 
யாரிவர்கள் இரு பூங்குயில்கள் 
இளங்காதல் மான்கள் 
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா 
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா 
அடடா 
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா.