படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SPB ஜானகி
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள் உன் கூந்தல்
என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் உன் கூந்தல்
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள் உன் கூந்தல்
என் ஊஞ்சல்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
பூவிலே மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் கண்கள் உன் கூந்தல்