இசை: இளைராஜா
படம்: அலைகள் ஓய்வதில்லை
பாடியவர்: ஜானகி
புத்தம் புது காலை பொன் நிற வேலை
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
சுக ராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன் நிற வேலை
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசை பாடுது
வழிந்தோடிடும் சுவை கூடுது
புத்தம் புது காலை பொன் நிற வேலை