படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாற்றே
மனம் தேடும் சுவையோடு தினந்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாற்றே
வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாற்றே
ஏதோ ஒன்றை தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மலையழகின் சுகம் ஏற்காதோ
இவையாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே
கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாற்றே