படம்: ரிதம்
இசையமைப்பாளர்: ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன்
திம்தனனா திம்தனனா திரனா
திம்தனனா திம்தனனா திம்தனனா திம்தனனா
திம்தனனா திம்தனனா திரனா
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
திம்தனனா திம்தனனா திம்தனனா திம்தனனா
திம்தனனா திம்தனனா திரனா
திம்தனனா திம்தனனா திம்தனனா திம்தனனா
திம்தனனா திம்தனனா திரனா
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றாள் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரை தொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
காதலி அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும், விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஓன்று வாடயிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
(திம்தனனா திம்தனனா)
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரை தொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
(திம்தனனா திம்தனனா)
தீங்கனியில் சாராகி பூக்களில் தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடும் பாயாகி சேய் அருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா ரெண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
(திம்தனனா திம்தனனா)