10.11.2012

மலரே மலரே உல்லாசம்

படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால் 
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி

மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் 
இதயம் எழுதும் கவிதை நீ 
மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

தாவணி கோவிலில் காவடி சிந்துகள் 
யாழிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ 
வீடெல்லாம்  காதலன் வாசனை வீசுதோ 
தூங்கினால் காதிலே நியாபகம் பேசுதோ
நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம் 
தகு தகு தகு தகு தகு தகு தா 
மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் 
இதயம் எழுதும் கவிதை நீ 
மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ 
மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ 
வாசலில் வாலிபம் வாழ்விலே யவ்வனம் 
கண்களோ  சம்மதம் கால்களே தாமதம் 
ஆடைகள் ஏது  நீராடும்போது 
தகு தகு தகு தகு தகு தகு தா 
மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
உன்னைத்தான் சந்தித்தால்
உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் 
இதயம் எழுதும் கவிதை நீ 
மலரே மலரே உல்லாசம் 
உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
லாலாலா லாலாலா லாலாலா.


ஆரிரோ ஆரிரோ இது

படம்: தெய்வ திருமகள்
இசை: G .V .பிரகாஷ் 
பாடியவர்: ஹரிச்சரண்

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்  மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே 
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்  மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே 
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது  கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்  மழலையின் மொழி கேட்டு