படம்:பாரதி
இசை:இளையராஜா
பாடியவர்:பவதாரிணி
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சி ஒன்னு(3 )
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு ஒன்னு
வண்டியிலே வண்ண மயில் நீயும் போனா
சக்கரமாய் என் மனசு சுத்துதடி
மந்தாரமல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சி ஒன்னு
வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ பந்தளோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சி ஒன்னு